ஒருவருட பணி உத்தரவாதம் அளிக்க மத்திய அரசுக்கு ஏர் இந்தியா ஊழியர் சங்கங்கள் கடிதம்..!
டாடா நிறுவனத்திடம் ஏர் இந்தியா நிர்வாகம் ஒப்படைக்கப்பட உள்ள நிலையில், அதன் ஊழியர் சங்கங்கள் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டாக கடிதம் எழுதியுள்ளன. ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஒருவருட பணி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊதியம் , விடுமுறை, மருத்துவ சலுகைகள், ஊழியர்கள் தங்குமிடங்கள், நிலுவைத் தொகை உள்ளிட்ட பிரச்சினைகளை சுட்டிக் காட்டி ஏர் இந்தியா யூனியன்கள் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திற்குக் கடிதம் போட்டுள்ளன.
Comments